என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பேசிய காட்சி.
    X
    நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பேசிய காட்சி.

    தன்னம்பிக்கையுடன் களத்தில் இறங்கினால் சாதாரணமானவர்களும் சாதனை மனிதர்களான மாற முடியும்

    மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் களத்தில் இறங்கினால் சாதாரணமானவர்களும் சாதனை மனிதர்களான மாற முடியும் என்று கல்லூரி முதல்வர் கூறினார்.
    அரியலூர்:

    அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், பொதுத் தேர்வு எழுத உள்ள 10 ஆம்வகுப்பு மாணவர்களுக்காக நடை பெற்ற துணிவுடன் பொதுத் தேர்வை எதிர்கொள்வோம் எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி முதல்வர் சாந்தகுமாரி கலந்து கொண்டு பேசியது :  

    தன்னம்பிக்கை, திட்டமிட்ட உழைப்பு, விடா முயற்சி, நேர நிர்வாகம் ஆகியவற்றை உணர்ந்து நமது செயல்பாடுகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் லட்சியம் என்பது அவசி–யமானது.

    லட்சியமில்லாத வாழ்க்கை துடுப்பில்லாத படகை போன்றது, காற்றில் நகர்ந்து செல்லுமே தவிர, கரையை சென்றடையாது.

    தன்னம்பிக்கையுடன் களத்தில் இறங்கினால், சாதாரணமானவர்களும் சாதனை மனிதர்களாக முடியும். மூச்சு விடுபவனெல்லாம் மனிதனில்லை, முயற்சி செய்பவர்களே நல்ல மனிதன்.  

    ஆகவே தேர்வைக் கண்டு எவ்வித பயமும் பதற்றமும் இல்லாமல் வினாத்தாளில் எளிதில் தெரிந்த வினாக்களுக்கு முதலிலும், மற்ற வினாக்களை அடுத்ததாகவும், வினா எண்களை தெளிவாக எழுத வேண்டும்.  

    தேர்வு நேரங்களில் சரிவிகித உணவும், எளிதில் ஜீரணிக்கும் உணவு, காய்கறி, பழங்களை அதிகம் உண்ண வேண்டும். அசைவ மற்றும் துரித உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்இ

    ளமையில் வியர்வை சிந்த தயங்கினால், முதுமையில் கண்ணீர் சிந்தும்சூழல் வரும். இதனால்,பள்ளி பருவத்திலேயே தங்களின் சிந்தனைகளை சீர்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.

    Next Story
    ×