என் மலர்
உள்ளூர் செய்திகள்

லூர்து மாதா ஆண்டு பெருவிழா தேர் பவனி நடைபெற்ற போது எடுத்த படம்.
லூர்து மாதா தேர்பவனி
வில்லியனூர் லூர்து மாதா ஆண்டு பெருவிழா தேர்பவனி நடைபெற்றது.
புதுச்சேரி:
வில்லியனூர் தூய லூர்து மாதா திருத்தலத்தின் ஆண்டு திருவிழாஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகை முடிந்த 6-ம் நாளில் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.
அதன்படி 145-வது ஆண்டு திருவிழா கடந்த 23-ந் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றதுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலிகள் மற்றும் சிறியதேர்ப் பவனி நடை–பெற்றது.
பெருவிழா நடந்தது. சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன், தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயர் யுவான் அம்புரோஸ் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து இரவு புதுவை - கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் ஆடம்பர தேர்ப்பவனி நடைபெற்றது.இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று மலர் தூவி மாதாவை வழிபட்டனர்.
Next Story






