என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
புதுச்சேரியில் ஒருவருக்கு கொரோனா
புதுவையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி,:
புதுவை மாநிலத்தில் நேற்று 204 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் புதுவையை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை. தற்போது கொரோனா தொற்று பாதிக்க ப்பட்டவர்களில் ஒருவர் மருத்துவ மனையிலும், 8 பேர் வீட்டு தனிமையிலும் என மொத்தம் 9 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு ஏதும் இல்லை.
புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்து 790 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 63 ஆயிரத்து, 819 பேர் குணமடைந்துள்ளனர். 1962 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து ள்ளனர். இந்த தகவல்களை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
Next Story






