என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை செய்து கொண்ட ரமேஷ்.
ஆற்றில் குதித்து பெயிண்டர் தற்கொலை
மனைவியை தாக்கியதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பயந்து போன கணவன் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை சாமிபிள்ளை தோட்டம் காரைக்கால் அம்மையார் தெரு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38) இவர்
பெயிண்டராக வேலைசெய்து வந்தார். இவருக்கு மீரா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதுபோல் ரமேசுக்கும் அவரது மனைவி மீராவுக்கும்தகராறு ஏற்பட்டது. அப்போது மீராவை ரமேஷ், தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த மீரா புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் மனைவி மீரா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதால், திடீரென பயந்து போன ரமேஷ் இன்று காலை மோட்டார் சைக்கிளில் சுண்ணாம்பாறு பகுதிக்கு வந்தார். அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து ரமேஷ் திடீரென பாலத்தில் இருந்து கீழே குதித்தார்.
இதைப்பார்த்த அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்ட மீனவர்கள் ரமேசை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
ஆனால் தலையில் பலத்த காயமடைந்ததால் ரமேஷ் இறந்து போனார்.
தகவலறிந்த தவள க்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு பிரேதத்தை கைப்பற்றி கதிர்காமம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






