என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிம்ஸ் ஆஸ்பத்திரியில் அதிநவீன மெய்நிகர் ஆய்வகத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
அதிநவீன ஆய்வகம்
பிம்ஸ் ஆஸ்பத்திரியில் அதிநவீன மெய்நிகர் ஆய்வகத்தை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
கனக செட்டிகுளம் பிம்ஸ் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அதிநவீன மெய்நிகர் ஆய்வக தொடக்க விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
கல்லூரி முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கினார்.புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக துணை வேந்தர் மோகன் முன்னிலை வகித்தார்.பிம்ஸ் முதல்வர் ரேணு வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் கவர்னர் தமிழிசை ஆய்வகத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-
கொரோனா கட்டுப்படுத்திட 30-வாரங்கள் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் முதல்வர் ரேணு உள்ளிட்ட பல மருத்துவ நிபுணர்கள் குழு பங்கேற்றனர்.
அதனால்தான் கொரோனா கட்டுப்ப டுத்திட முடிந்தது. மத்தியில் இதற்கு பாராட்டு பெற்றோம்.இங்கு பேசிய ஆலோசகர்பாபு டேனியல் ,60ஆண்டுக்கு பிறகு முதல் தமிழ் பேசும் கவர்னர் வந்துள்ளார் என்றார்.இங்கு தமிழே வந்துள்ளேன்.என் பெயரிலே தமிழ் உள்ளது. நம் மருத்துவ மாணவ-மாணவிகள் புதிய ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் தம்மை புதுப்பித்து கொண்டால் தான் நாம் பல்வேறு புதிய நோய்களை கண்டறிந்து அதனை கட்டுபடுத்த முடியும். பலருக்கும் கிடைக்காத மருத்துவ வாய்ப்பு உங்களுக்கு கிடைத்து உள்ளது.
ஆகையால் கஷ்டப்பட்டு படிப்பதை விட்டு விட்டு இஷ்டப்பட்டு படிக்க வேண்டும்.
நான் மருத்துவ உதவி பேராசிரியராக இருந்த காலத்தில் கடைசி பெஞ்ச் மாணவர்களின் கல்வி மேம்பாடுகளுக்கு உதவியாக இருந்தேன்.
ஆகையால் அன்றைய பாடத்தை நன்றாக புரிந்து கொண்டு படியுங்கள் மகிழ்ச்சியாக கல்லூரி படிப்பை படியுங்கள். அது கட்டுப்பாடுடன் கூடியதாக இருக்க வேண்டும். ஊக்கம் தந்தால் தான் முன்னேற முடியும். அந்தவகையில் இங்கு இந்த ஆய்வகம் அமைய ஊக்கம் தந்த மருத்துவ கல்லூரிக்கு நன்றி.
இதனை பயன்பாட்டுக்கு தந்த மெடிசிம்- வி.ஆர். ஆதிக் சின்னசாமி.சபரீஷ் ஆகியோரை பாராட்டுகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அனைத்து துறை பேராசிரியர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story