என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - கல்லூரி மாணவிகள் உள்பட 60 பேர் படுகாயம்
Byமாலை மலர்29 April 2022 8:47 PM GMT (Updated: 29 April 2022 8:47 PM GMT)
சீர்காழி அருகே காரைமேடு என்ற இடத்தில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக சாலையோரம் சென்றபோது எதிர்பாராத விதமாக பேருந்து விபத்தில் சிக்கியது.
மயிலாடுதுறை:
காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வழியாக பாண்டிச்சேரிக்கு சுமார் 65 பயணிகளுடன் நேற்று இரவு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
சீர்காழி அருகே காரைமேடு என்ற இடத்தில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக சாலையோரம் சென்ற போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி மாணவிகள் உள்பட 60 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்த காரணமாக சீர்காழி- நாகப்பட்டினம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X