என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்
தியாகதுருகத்தில் மின்வாரியத்துறை கண்டன ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தியாகதுருகத்தில் மின்வாரியத்துறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகத்தில் சமூகநீதி அதற்கான சர்வதேச குடியியல் உரிமைகள் ஆணையம் சார்பில் துணை மின் நிலையத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தியாகதுருகத்தில் திருக்கோவிலூர் சாலையில் உள்ள மின்சார வாரியம் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் கபீர்பாஷா தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் மணிகண்டன், மாநில இளைஞர் அதிகார தலைவர் சந்துரு, நகர தலைவர் முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளை ஞரணி தலைவர் அன்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், தியாகதுருகம் பகுதியில் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுவதை கண்டித்தும், கம்பியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தியாகதுருகம் நகர் முழுவதும் மும்முனை மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உறுப்பினர்கள் ஜெயவேல், தமிழ்வாணன், வேலு, பிரகாஷ், வினோத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தியாகதுருகத்தில் சமூகநீதி அதற்கான சர்வதேச குடியியல் உரிமைகள் ஆணையம் சார்பில் துணை மின் நிலையத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தியாகதுருகத்தில் திருக்கோவிலூர் சாலையில் உள்ள மின்சார வாரியம் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் கபீர்பாஷா தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் மணிகண்டன், மாநில இளைஞர் அதிகார தலைவர் சந்துரு, நகர தலைவர் முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளை ஞரணி தலைவர் அன்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், தியாகதுருகம் பகுதியில் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுவதை கண்டித்தும், கம்பியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தியாகதுருகம் நகர் முழுவதும் மும்முனை மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உறுப்பினர்கள் ஜெயவேல், தமிழ்வாணன், வேலு, பிரகாஷ், வினோத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story






