என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்த அம்மன்.
    X
    சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்த அம்மன்.

    சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சியில் கங்கை அம்மன் கோவில் திருவிழா

    சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சியில் கங்கை அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி கிராமத்தில் கங்கையம்மன் திருவிழா நடந்தது.

     திருவிழாவை முன்னிட்டு கங்கையம்மனுக்கு பால், தயிர், தேன், இளநீர், பன்னீர், குங்குமம் உள்ளிட்ட நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பல வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக் கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. 

    இதனை தொடர்ந்து கங்கையம்மன் சாமி அலங்காரம் செய்யப்பட்ட பெரிய தெரு, குளக்கரை வீதி, திடீர் நகர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
    Next Story
    ×