என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
திருநாவலூர் அருகே கண்காணிப்பு கேமிரா திறப்பு
திருநாவலூர் அருகே ஈஸ்வர கண்டநல்லூரில் கண்காணிப்பு கேமிராவை உளுந்தூர்பேட்டை போலீஸ் டி.எஸ்.பி.மகேஷ் திறந்துவைத்து பேசினார்.
திருநாவலூர்:
உளுந்தூர்பேட்டை உட்கோட்ட பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் சாலை விபத்து குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனை குறைக்கும் பொருட்டு கிராம பகுதியில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருநாவலூர் அருகே ஈஸ்வர கண்ட நல்லூரில் கண்காணிப்பு கேமிராவை உளுந்தூர்பேட்டை போலீஸ் டி.எஸ்.பி.மகேஷ் திறந்துவைத்து பேசினார். நிகழ்ச்சியில் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுரளி, விநாயகம், தனிப்பிரிவு தலைமை காவலர் மனோகர் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
Next Story






