என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவிக்கு அமைச்சர் சிவசங்கர் பரிசு வழங்கிய போது எடுத்தப்படம்.
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
தலைநிமிரும் தமிழகம் என்ற தலைமைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது.
அரியலூர்:
தமிழ்நாடு அரசுமாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் தலைநிமிரும் தமிழகம் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்றது.
இப்பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவி ஆர்.சுவாதிகாவிற்கு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினார்.
மேலும் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மற்றும் பங்கு பெற்ற அனைவருக்கும் கல்லூரியின் தாளாளர் எம்.ஆர். ரகுநாதன், கல்லூரியின் செயலாளர் எம்.ஆர்.கமல் பாபு, கல்லூரி முதல்வர் ஜோ. ஜெயா மற்றும் கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியைகள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசுமாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் தலைநிமிரும் தமிழகம் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்றது.
இப்பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவி ஆர்.சுவாதிகாவிற்கு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினார்.
மேலும் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மற்றும் பங்கு பெற்ற அனைவருக்கும் கல்லூரியின் தாளாளர் எம்.ஆர். ரகுநாதன், கல்லூரியின் செயலாளர் எம்.ஆர்.கமல் பாபு, கல்லூரி முதல்வர் ஜோ. ஜெயா மற்றும் கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியைகள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
Next Story






