என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அமித்ஷா உத்தரவுப்படி கட்சி பணி தொடங்குங்கள்: சாமிநாதன் அறிவுறுத்தல்

    அமித்ஷா உத்தரவுப்படி கட்சி பணி தொடங்குங்கள் என்று பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா உயர்மட்டக்குழு கூட்டம் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம், அசோக்பாபு எம்.எல்.ஏ., பொதுச் செயலாளர் மோகன்குமார், துணைத்தலைவர் அருள்முருகன், ரத்தினவேல், செயலாளர் அகிலன், கூட்டுறவு பிரிவு தலைவர் வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், அலுவலக பொறுப்பாளர் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

    கூட்டத்தில், அமித்ஷாவுக்கு வரவேற்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்த நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப் பட்டது. 

    அமித்ஷா இட்ட கட்டளையை நிர்வாகிகள் நிறைவேற்றுவதற்கான பணிகளை துரிதமாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மத்திய மந்திரி அமித்ஷா கட்சி நிர்வாகிகளிடம் பேசும்போது வருகிற செம்டம்பர் மாதத்துக்குள் அனைத்து தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகளையும் நியமித்திருக்க வேண்டும். அந்த பட்டியலை தலைமைக்கு சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

    அதோடு, தொகுதி பொறுப்பாளர்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களை குறைந்தபட்சம் 3-ல் ஒரு பங்கை சேர்ந்தவர்களிடம் நேரடி தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். இதை நிறைவேற்ற கட்சி நிர்வாகி கள் பணிகளை தொடங்க வேண்டும் என சாமிநாதன் கேட்டுக்கொண்டார்.
    Next Story
    ×