என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூய மங்கள அன்னை ஆலய தேர் பவனி நடைபெற்றபோது எடுத்தபடம்.
மங்கள அன்னை ஆலய தேர்த்திருவிழா
அரியலூர் அருகே 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மங்கள அன்னை ஆலய தேர்த்திருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள தூய மங்கள அன்னை ஆலயம் 87ம் ஆண்டு தேர்த்திருவிழா நடைபெற்றது.
முன்னதாக கடந்த 16ந்தேதி திருமழபாடி பள்ளிவாசல் மஜித் சாதிக் மற்றும் சி.எஸ்.ஐ. சர்ச் கண்ணியர் கீதா முன்னிலையில் காரியகார வயரா பிரான்சிஸ் தலையில் கொடியேற்றப்பட்டது.
17ந்தேதி புதுக்கோட்டை மரியாயின் சேனையினர் தலைமையில் அய்யம்பேட்டை பங்குதந்தை அந்துவான் தலைமையிலும், 18ந்தேதி கரும்பு வெட்டும் குழுவினர் தலைமையில் குடந்தை அருண் சபரிராஜ் தலைமையிலும்,
19ந்தேதி பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை வின்சன்ட் தே பவுல் சபை சார்பாக பங்குதந்தை குழந்தை விட்டார் லாரன்ஸ் தலைமையிலும் திருப்பலி நடத்தப்பட்டது.
இதேபோல் ஜான்போஸ்கோ, அமலதாஸ், தென் போஸ்கோ, புஷ்பராஜ், ஜெயராஜ், அமர்சிங் திருப்பலிகளை நடத்தினர். நேற்று (23-ந்தேதி) அனைத்து பங்கு மக்கள் முன்னிலையில் குடந்தை மறை மாவட்ட பேராயர் அந்தோணிசாமி சிறப்பு திருவிழா திருப்பலி நடத்திவைத்தார்.
நாளை திருவிழாவின் நிறைவாக புதுக்கோட்டை பங்குதந்தை ரெஜிஸ் தலைமையில் மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடைபெற உள்ளது. திருவிழாவில் உள்ளுர் மற்றும் வெளியூர் பக்தர்கள் மாற்று மதத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள தூய மங்கள அன்னை ஆலயம் 87ம் ஆண்டு தேர்த்திருவிழா நடைபெற்றது.
முன்னதாக கடந்த 16ந்தேதி திருமழபாடி பள்ளிவாசல் மஜித் சாதிக் மற்றும் சி.எஸ்.ஐ. சர்ச் கண்ணியர் கீதா முன்னிலையில் காரியகார வயரா பிரான்சிஸ் தலையில் கொடியேற்றப்பட்டது.
17ந்தேதி புதுக்கோட்டை மரியாயின் சேனையினர் தலைமையில் அய்யம்பேட்டை பங்குதந்தை அந்துவான் தலைமையிலும், 18ந்தேதி கரும்பு வெட்டும் குழுவினர் தலைமையில் குடந்தை அருண் சபரிராஜ் தலைமையிலும்,
19ந்தேதி பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை வின்சன்ட் தே பவுல் சபை சார்பாக பங்குதந்தை குழந்தை விட்டார் லாரன்ஸ் தலைமையிலும் திருப்பலி நடத்தப்பட்டது.
இதேபோல் ஜான்போஸ்கோ, அமலதாஸ், தென் போஸ்கோ, புஷ்பராஜ், ஜெயராஜ், அமர்சிங் திருப்பலிகளை நடத்தினர். நேற்று (23-ந்தேதி) அனைத்து பங்கு மக்கள் முன்னிலையில் குடந்தை மறை மாவட்ட பேராயர் அந்தோணிசாமி சிறப்பு திருவிழா திருப்பலி நடத்திவைத்தார்.
நாளை திருவிழாவின் நிறைவாக புதுக்கோட்டை பங்குதந்தை ரெஜிஸ் தலைமையில் மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடைபெற உள்ளது. திருவிழாவில் உள்ளுர் மற்றும் வெளியூர் பக்தர்கள் மாற்று மதத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story






