என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஜிப்மரில் கொரோனா வார்டு

    ஜிப்மரில் கொரோனா சிகிச்சை மையம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    இந்தியாவில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. 

    பிற மாநிலங்களில் இருந்து புதுவைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். அவர்கள் மூலம் மீண்டும் புதுவையில் தொற்று பரவல் அதிகரிக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜிப்மர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைப்பு கட்டடத்தில் கொரோனா சிகிச்சை மையம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

    அனைத்து உபகரணங்கள், மருந்துகளுடன், பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். கோரிமேடு மார்பக நோய் மருத்துவமனையில் உள்ள மாநில சுகாதாரத் துறையின் கொரோனா வார்டிலும் சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
    Next Story
    ×