என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
உழவர் சந்தையை விரிவாக்கம் செய்ய பொது மக்கள் கோரிக்கை
அரியலூரில் உழவர் சந்தையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் ஜெயங்-கொண்டம் சாலையில் திமுக ஆட்சியில் உழவர் சந்தை ஒரு ஏக்கர் பரப்பளவில் 50 கடைகளை கொண்டு அமைக்கப்பட்டது.
திமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களில் மிக உன்னதமான திட்டமாகும். பொது மக்கள் விவசாயிகள் பெரிதும் பயனடைந்து வந்தனர். 23.9.2000 ம் ஆண்டு உழவர் சந்தையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
50 கடைகள் இருக்கும் வாடகை கிடையாது, மின்விளக்கு, கழிப்பிட வசதி, தேனீர் வசதி, குடிநீர் வசதியுடன், இலவசமாக தராசு, படிக்கற்கள் வழங்கப்பட்டது.
காய்கறி, பழவகைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம். திமுக ஆட்சி காலத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தது.
பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் உழவர் சந்தையை மூடிவிட்டனர். பத்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிய பொலிவுடன் உழவர் சந்தை திறக்கப்பட்டுள்ளது. மேலும் உழவர் சந்தையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
அரியலூர் நகரங்களில் சாலை ஓரங்களில் ஏலம் எடுக்காமல், முன்வைப்பு தொகை செலுத்தாமல், வாடகை, மின்சார பில் செலுத்தாமல், சாலைகளில் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்றி உழவர் சந்தைக்கு அனுப்ப வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் ஜெயங்-கொண்டம் சாலையில் திமுக ஆட்சியில் உழவர் சந்தை ஒரு ஏக்கர் பரப்பளவில் 50 கடைகளை கொண்டு அமைக்கப்பட்டது.
திமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களில் மிக உன்னதமான திட்டமாகும். பொது மக்கள் விவசாயிகள் பெரிதும் பயனடைந்து வந்தனர். 23.9.2000 ம் ஆண்டு உழவர் சந்தையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
50 கடைகள் இருக்கும் வாடகை கிடையாது, மின்விளக்கு, கழிப்பிட வசதி, தேனீர் வசதி, குடிநீர் வசதியுடன், இலவசமாக தராசு, படிக்கற்கள் வழங்கப்பட்டது.
காய்கறி, பழவகைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம். திமுக ஆட்சி காலத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தது.
பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் உழவர் சந்தையை மூடிவிட்டனர். பத்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிய பொலிவுடன் உழவர் சந்தை திறக்கப்பட்டுள்ளது. மேலும் உழவர் சந்தையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
அரியலூர் நகரங்களில் சாலை ஓரங்களில் ஏலம் எடுக்காமல், முன்வைப்பு தொகை செலுத்தாமல், வாடகை, மின்சார பில் செலுத்தாமல், சாலைகளில் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்றி உழவர் சந்தைக்கு அனுப்ப வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






