search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வில்லியனூரில் புனித லூர்துமாதா தேவாலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    X
    வில்லியனூரில் புனித லூர்துமாதா தேவாலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    லூர்து மாதா ஆலயத்தில் கொடியேற்றம்

    புனித லூர்து மாதா தேவாலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூரில் உள்ள பிரசித்திபெற்ற  தூய லூர்து அன்னை  திருத்தலத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிந்த 6வது நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கும்.

    145வது ஆண்டு திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது. 
    காலை 5.30 மணிக்கு திருத்தல வளாகத்தில் அமைந்திருக்கும் அருள்நிறை ஆலயத்தில் நடைபெற்ற கூட்டு திருப்பலிக்கு பின்னர், திருத்தல  முற்றத்தில் உள்ள கொடிமரத்தில்  சென்னை  மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா கொடியேற்றி ஆண்டு திருவிழாவினை தொடங்கி வைத்தார். 

    முன்னதாக அருள்நிறை ஆலயத்தில் இருந்து திருக்கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடி யேற்றப்பட்டது. 
    இதனை தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலி மற்றும் தேர் பவனி நடைபெறுகிறது.
    Next Story
    ×