search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    நெமிலி:

    ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை 1.25 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தது.

    அப்போது அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் எழில்வேந்தன் ஆனந்தன் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரெயில் பெட்டிகளில் ஏறி சோதனை செய்தனர். 

    அதில் முன்பக்க பொதுப் பெட்டியில் உள்ள கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையை திறந்து பார்த்தபோது அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. 

    அதனை ரெயில்வே போலீசார்  பறிமுதல் செய்து கஞ்சாவை கடத்தியது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×