என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
கதண்டு கடித்து 26 பேர் படுகாயம்
குத்தாலம் அருகே கதண்டு கடித்ததில் நூறு நாள் திட்டப் பணியாளர்கள் 26 பேர் படுகாயமடைந்தனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, பேராவூர் கரூப்பூர் கிரா-மத்தில் பணித்தள பொறுப்பாளராக பணியாற்றி வருபவர் ஜெனிபர்ராஜ் (வயது-32). இவரது கண்காணிப்பில் 125 விவசாய
தொழிலாளர்கள், நூறு நாள் வேலை செய்து கொண்டிருந்தனர். இதில் சில பேர், பெரம்படி வாய்க்காலிலுள்ள நாணல், கோரைகளை சுத்தம் செய்வதற்காக அவற்றை அகற்றும் போது, அதிலிருந்த
கதண்டுகள் தாக்கியதில் பலத்த காயமடைந்த 26- பேர், கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அவர்களில் 10- பேர் முதலுதவி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து குத்தாலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






