என் மலர்
உள்ளூர் செய்திகள்

மயிலம் செவிலியர் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்க பயிற்சி வகுப்பு நடைபெற்ற காட்சி.
தேசிய அளவிலான கருத்தரங்க வகுப்பு
மயிலம் கல்வி குழுமத்தின் ஓர் அங்கமான மயிலம் செவிலியர் கல்லூரியில் தேசிய அளவிலான முதல் கருத்தரங்க பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
புதுச்சேரி:
மயிலம் சுப்பிரமணிய சாமி கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி பேரிடர் முன் ஏற்பாடு மற்றும் தீயணைப்பு மேலாண்மை பற்றிய முதல் தேசிய அளவிலான கருத்தரங்கம் 2 நாட்கள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மயிலம் செவிலியர் கல்லூரியின் முதல்வர் தமிழ்செல்வி வரவேற்புரையாற்றினார். மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் செந்தில் வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக ஜிப்மர் செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் குமாரி சிறப்புரையாற்றினார். அவரை தொடர்ந்து மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியின் முதல்வர் தனுசு, மயிலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் பார்த்திபன் ஜெயராமன், விழுப்புரம் மாவட்ட பயிற்சி குழுவின் மருத்துவ அதிகாரி டாக்டர் பாக்கியலட்சுமி, விழுப்புரம் மாவட்ட தொற்றா நோய் திட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் விஷ்ணுகுமரன், ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.
2 நாள் கருத்தரங்கில் திண்டிவனம் தீயணைப்பு துறை அதிகாரி கதிர்வேல் மற்றும் குழுவினர்களால் தீயணைப்பு மேலாண்மை பற்றிய செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் இக்கருத்தரங்க பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழா முடிவில் பேராசிரியர் அருணா நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மயிலம் செவிலியர் கல்லூரி மாணவர்கள் மற்றும் மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்
Next Story






