என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாரதிதாசன் நினைவு கருத்தரங்கம்
Byமாலை மலர்22 April 2022 4:06 AM GMT (Updated: 22 April 2022 4:06 AM GMT)
பாரதிதாசன் நினைவுநாளையொட்டி கருத்தரங்கம் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை சிந்தனையாளர் பேரவை மற்றும் தேவிதாசன் அறக்கட்டளை சார்பில் பாரதிதாசன் நினைவுநாளையொட்டி சிறப்பு கருத்தரங்கம் ஜோதி கண்மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது.
கருத்தரங்கத்துக்கு தமிழ் அறிவியல் ஆய்வறிஞர் தாமரைக்கோ தலைமை தாங்கினார். சிந்தனையாளர் பேரவை செயலாளர் காமராசு வரவேற்புரையாற்றினார். பேரவை தலைவர் கவிஞர் கோ.செல்வம் நோக்கவுரையாற்றினார்.
கருத்தரங்கில் மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகநாதன், தன்னுரிமை கழக தலைவர் சடகோபன், படைப்பாளர் இயக்கம் சீனு.தமிழ்நெஞ்சன், கலாச்சார புரட்சி இயக்கம் பிராங்க்ளின் பிரான்சுவா, சுவடுகள் இலக்கிய பேரவை செல்வமணி அசோகன் ஆகியோர் உரையாற்றினர். இதில் தேவிதாசன் அறக்கட்டளை நிறுவனர் தேவிதிருவளவன், பேரவை துணைத்தலைவர் கவுசல்யாதேவி, பொருளாளர் சரஸ்வதி வைத்தியநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ் வளர்ச்சிதுறை அமைக்க வேண்டும், தமிழ் விருதுகள் வழங்கவேண்டும், படைப்பாளர்களுக்கு ஊக்கத்திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 29ந் தேதி பாரதிதாசன் பிறந்தநாளில் சுதேசி மில் அருகே அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X