என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வாலாஜா அடுத்த ஓழுகூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி

    வாலாஜா அடுத்த ஓழுகூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த ஒழுகூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 71) விவசாயி. இவர் நேற்று வீட்டுக்கு அருகிலுள்ள விவசாய பம்பு செட்டில் நிலத்துக்கு நீர் பாய்ச்ச மோட்டாரை இயக்கி விட்டு வீட்டுக்கு வந்து விட்டார். பின்னர் மின் மோட்டாரை நிறுத்து வதற்காக சென்றவர். 

    அங்கு கீழே அறுந்து கிடந்த மின்சார வயரை கவனிக்காமல் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு மயங்கிய நிலையில் கடந்தார். 

    அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வாலாஜா போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×