என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் பயணம் தொடங்கினர்.
வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் பயணம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் லாஸ்பேட்டையில் தொடங்கி பாகூர் வரை சைக்கிள் பயணம் தொடங்கியது.
புதுச்சேரி:
மின்துறையை தனியாரிடம் ஒப்படைக்காமல், காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
மத்திய பா.ஜனதா அரசு அளித்த ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
பஞ்சாலைகளை புனர மைத்து நிதி ஒதுக்கி தொடர்ந்து இயக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை நிவாரணமாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களை முறைப்படுத்தி குறைந்தபட்ச சம்பளமாக ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும்.
இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க வேலைவாய்ப்புகளை உருவாக்க வலியுறுத்தி இந்த சைக்கிள் பயணம் மேற் கொள்ளப்பட்டது.
இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். சைக்கிள் பயணம் புதுவையின் முக்கிய வீதிகளின் வழியாக பாகூரை சென்றடைகிறது.
Next Story






