என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகரும் கண்காட்சியை பார்வையிட்ட பள்ளி மாணவிகள்.
    X
    நகரும் கண்காட்சியை பார்வையிட்ட பள்ளி மாணவிகள்.

    வ.உ.சி.யின் நகரும் புகைப்பட கண்காட்சி

    சீர்காழியில் வ.உ.சி.யின் நகரும் புகைப்பட கண்காட்சியை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார் 150வது பிறந்த நாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் அவரது வாழ்கை, வரலாற்றை பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்துக் கொள்ளும் வகையில் அரசு பேருந்தில் நகரும் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டு பள்ளிகளுக்கு சென்று வருகிறது.

    அவ்வகையில் சீர்காழி ச.மு.இ மேல்நிலைப் பள்ளி மைதானத்திற்கு நகரும் புகைப்படக் கண்காட்சி வாகனம் வருகை புரிந்தது.கண்காட்சி வாகனத்தை சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரிராஜசேகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    ச.மு.இ.பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி, உடற்கல்விஇயக்குனர் முரளிதரன், உடல் கல்வி ஆசிரியர் முரளி நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, நகராட்சி பள்ளி, தனியார் பள்ளிகள் என 10 க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் புகைப்பட கண்காட்சியை கண்டு கப்பலோட்டிய தமிழர் வ.உ.சியின் சுதந்திரம் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாற்று முறைகள் குறித்து ஆசிரியர்கள் விவரிக்க தெரிந்து கொண்டனர்.

    கண்காட்சி வாகனத்தில் அமைக்கப் பட்ட இந்த ஊசி உருவச் சிலையை மாணவ மாணவிகள் வணங்கி உருவச் சிலையுடன் நின்று செல்பி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.அதன்பின்னர் நகர் மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், நித்தியாதேவி, நாகரத்தினம், ரோட்டரி சங்கத்தினர், டெம்பிள்டவுன் ரோட்டரி சங்கத்தினர், லயன்ஸ் சங்கத்தினர் கண்காட்சியை கண்டுரசித்தனர்.
    Next Story
    ×