என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாசில்தார் அலுவலகத்தில் இந்து அமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர்.
பழமையான கோவிலை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு
விழுப்புரம்& நாகை சாலை விரிவாக்க பணிக்காக பழமையான கோவிலை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் காத்திருப்பு கிராமத்தில் அமைந்துள்ள சின்னந்தி மாரியம்மன் கோவில் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்தது. விழுப்புரம் &நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக இந்த கோவில் அமைந்துள்ள இடம் கிராமவாசிகளின் கடும் எதிர்ப்பிற்கிடையே கையகப்படுத்தப்பட்டது.
இதற்கான இழப்பீட்டு தொகை கடந்த மாதம் சின்னந்தி மாரியம்மன் பெயரில் திருவெண்காடு உள்ள வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதோடு இதற்கான காசோலை புத்தகம் கோயில் தக்கார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலரிடம் வழங்கப்பட்டுள்ளதாக கிராமமக்களால் கூறப்படு-கிறது.
கோயிலை அகற்றக் கூடாது என கிராமமக்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டுக்காரர்கள் பல்வேறு வகையில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதிகாரி-களிடமும் கோரிக்கையாக முன்வைத்தும் உரிய தீர்வு கிடைக்கவில்லை. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அழுத்தத்தால் உடனடியாக கோயிலை இடிக்க முயற்சி செய்வதாக கிராமத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
புதிதாக வேறு இடத்தில் கோயில் கட்ட கிராம மக்கள் முடிவு செய்தாலும் புதிதாக கோயில் கட்டுவதற்கு வந்துள்ள இழப்பீட்டு தொகையை கட்டுமானப்-பணிகளுக்கு தரமறுக்கும் அதிகாரிகளை கண்டித்தும், கோயிலை இடிக்கும் திட்டத்தை கைவிடக்கோரியும் சாலை மறியல் போராட்டத்தினை கிராம மக்கள் மற்றும் இந்து அமைப்புகள் ஒன்று கூடி அறிவித்தனர்.
இதனிடையே சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அமைதி பேச்சுவார்த்தைக்கு சீர்காழி தாசில்தார் அழைப்பின்பேரில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. தாசில்தார் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன், விஎச்பி பொறுப்பாளர் செந்தில்குமார் மற்றும் திருக்கோயில் உபயதாரர்கள் வழிபாட்டுகாரர்கள் குலதெய்வ காரர்கள், கிராமத்தினர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் புதிய கோயில் கட்டுவது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை அனுமதி பெற்று 15 தினங்களில் அறிவிக்கப்-படும்,எனவும், டெண்டர் விடப்பட்டு பின்னர் கோயில் உள்ள சுவாமி சிலை அப்புறப்படுத்தப்படும் எனவும் அதுவரையில் கோயில் சாலை விரிவாக்கப் பணிக்காக இடிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டது மேலும் சின்ன மாரியம்மன் பெயரில் உள்ள வங்கிகணக்கு பரிவர்த்தனை பெற்று செயல் அலுவலர் கிராம மக்களிடம் முழுமையாக தெரிவிக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது இதனை அடுத்து சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
Next Story






