என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
பாணாவரம் அருகே ஆட்டோ மீது பைக் மோதி வாலிபர் படுகாயம்
பாணாவரம் அருகே ஆட்டோ மீது பைக் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த புதிய பாலகிருஷ்-ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம்.இவரது மகன் பரத் (22).
ராணிப்பேட்டை தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பாணாவரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்று வீடு திருபினார்.
அப்போது பாணாவரம் மேல் வெங்கடாபுரம் சாலை அருகே உள்ள வளைவில் வந்த ஆட்டோ பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்து மயக்கம் அடைந்த பரத்தை அங்கிருந்-தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்-கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதுகுறித்து பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






