search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பேன்சி ஸ்டோர் உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது

    12 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பேன்சி ஸ்டோர் உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    புதுச்சேரி:

    புதுவை சுப்பையா நகரை சேர்ந்தவர் சங்கர்லால் (வயது 42). இவர், புதிய பஸ் நிலையம் அருகே பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். 

    இந்த கடையில் நரிக்குறவ பெண்கள் ஊசி பாசி மணி மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை மொத்தமாக வாங்கி பஸ் நிலையம் மற்றும் கடற்கரை சாலை பகுதியில்  விற்பது வழக்கம். 

    அதுபோல் கணவரை இழந்த ஒரு நரிக்குறவ பெண் தனது 12 வயது மகளுடன் சங்கர்லால் கடைக்கு சென்று  ஊசி பாசி மணிகள் வாங்கி வந்தார்.

    ஒரு முறை தனது மகளை அனுப்பி சங்கர்லால் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருமாறு கூறியதாக தெரிகிறது. அப்போது சங்கர்லால் அந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  இதுபற்றி அந்த சிறுமி தனது தாயிடம் கூறி முறையிட்டார். 

    இதையடுத்து  அந்த பெண் இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சங்கர்லாலை கைது செய்தனர்.
    Next Story
    ×