என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேரோட்டத்தை திருவாவடுதுறை ஆதீனம் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
மயிலாடுதுறையில் ஐயாறப்பர் கோவில் தேரோட்டம்
மயிலாடுதுறை ஐயாறப்பர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் அறம்வளர்த்தநாயகி உடனாய ஐயாறப்பர் கோயில் பெரிய கண்ணார தெருவில் அமைந்துள்ளது. இக்கோவில் அப்பர் பெருமானால் போற்றப் பெற்று, திருவையாறு ஐயாறப்பர்
தீவிர சிவபக்தர்களான நாதசன்மா அவரது மனைவியான அநவித்தை ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று அறம்வளர்த்தநாயகி உடனாய ஐயாறப்பர் மேற்கு திசையை நோக்கி எழுந்தருளினார்.
இக்கோவிலில் சிவபெருமானை மனமுருகி வேண்டினால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். இதனையொட்டி சித்திரைத் திருவிழாவில் திருத்தேர் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி தேர் வீதி உலா
நடைபெற்றது. 24 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். பாடசாலை நிறுவனர் சிவஸ்ரீ சுவாமிநாதன்
சிவாச்சாரியார் தலைமையிலான வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத தேர் 4 வீதிகளை சுற்றி வலம் வந்து சன்னதியை அடைந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, உதவி கண்காணிப்பாளர் கணேசன், பொருளாளர் வெங்கடேசன், 100 வருடங்களுக்குப் பிறகு சொந்த செலவில் பழமை மாறாமல் புதியதாக கட்டப்பட்ட
தேரை வழங்கிய ஓய்வு பெற்ற பேராசிரியர் எஸ். கனகசபை, சபதியர் விவேகானந்தன், நகரமன்ற உறுப்பினர்கள் ஆனந்தி ஆனந்தகுமார், வளர்மதி தெய்வநாயகம், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்
ஆர்.கே. சங்கர், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






