search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈஸ்டர் பண்டிகையையொட்டி புதுவை மிஷன் வீதி ஜென்மராக்கினி ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் பங்கேற்ற க
    X
    ஈஸ்டர் பண்டிகையையொட்டி புதுவை மிஷன் வீதி ஜென்மராக்கினி ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் பங்கேற்ற க

    தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

    ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
    புதுச்சேரி;

    இயேசு உயிர்த்தெழுந்ததை நினைவு கூறும் ஈஸ்டர் பெருநாள்,  கொண்டாடப்பட்டது.


    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்ததன் மூலம் அவர் இந்த உலகின் பாவங்கள் அனைத்தையும் தானே எடுத்து கொண்டார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.

    புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்ட இயேசு 3-ம் நாள் உயிர்த்-தெழுந்த நிகழ்வு தேவாலயங்களில் நடத்தப்பட்டது. நள்ளிரவு திருப்பலிகள் நடந்தன.  

    இதனையொட்டி புதுவையில் உள்ள தூய இருதய ஆண்-டவர் பசிலிக்கா பேராலயம், வில்லியனூர் மாதா ஆலயம், நெல்லித் தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலயம், அரியாங்குப்பம் ஆரோக்கிய அன்னை ஆலயம், தட்டாஞ்சாவடி பாத்திமா ஆலயம், ஆட்டுப்பட்டு அந்தோணியார் ஆலயம், உழவர்கரை ஜெயராக்கினி அன்னை ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்-பலியுடன் பிரார்த்தனைகள் நடந்தது.   இதில் கிறிஸ்-தவர்கள் ஏராள மானோர் பங்கேற்றனர்.  
    இன்று காலையும் சிறப்பு ஆராதனை, திருப்பலிகள் நடந்தன. கிறிஸ்தவர்கள் புத்தாடை உடுத்தி தங்கள் மகிழ்ச்சியை ஒருவருக்-கொருவர் பகிர்ந்து கொண்டனர்.
    Next Story
    ×