என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாடியில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி
Byமாலை மலர்17 April 2022 5:51 AM GMT (Updated: 17 April 2022 5:51 AM GMT)
கோவிந்தசாலையில் மாடியில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலியானார்
புதுச்சேரி:
புதுவை கோவிந்த சாலை வாஞ்சிநாதன் வீதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தவர் ஜெயலட்சுமி. (வயது 72) இவரது கணவர் மற்றும் 2 மகன்கள் இறந்து விட்ட நிலையில் வேல்ராம்பட்டு ஏரிக்கரைவீதியில் வசிக்கும் மகள் மாலதி அவ்வப்போது ஜெயலட்சுமிக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார். ஜெயலட்சுமிக்கு வயது முதிர்ச்சி காரணமாக குறைந்த ரத்த அழுத்த நோய் இருந்து வந்தது.
இந்த நிலையில் வீட்டின் மாடியில் இருந்து ஜெயலட்சுமி படிகட்டில் இறங்கிய போது திடீரென மயங்கி கிழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஜெயலட்சுமியை வீட்டின் உரிமையாளர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெயலட்சுமி பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து அவரது மகள் மாலதி கொடுத்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X