என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புதுச்சேரியில் ஆன்மிக நடைபயணம்
Byமாலை மலர்17 April 2022 5:41 AM GMT (Updated: 17 April 2022 5:41 AM GMT)
புதுவை வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் ஆன்மிக நடைபயணம் நடைபெற்றது.
புதுச்சேரி:
வில்லியனூரில் பழமைவாய்ந்த திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது.
அதனை சுற்றிலும் பிரசித்திபெற்ற 6 சிவாலயங்களும், 18 சித்தர் ஜீவ சமாதியும் உள்ளது. திருவண்ணாமலை கிரிவலம் போல வில்லியனூர் திருகாமீஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி நாளில் ஆன்மிக நடைபயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
நடை பயணத்தில் பங்கேற்ற பக்தர்கள் நான்கு மாட வீதிகளில் உள்ள அம்மன், விநாயகர், தென்கலை வரதராஜபெருமாள் கோவில்களில் வழிபட்டு, அனந்தம்மாள் மடம் ஆஞ்சநேயர், ஏகாம்பர ஈஸ்வரன் கோவில், மூலக்கடை பாடல் பெற்ற வினாயகர் கோவில், ராமபரதேசி சித்தர் பீடம் உட்பட பல்வேறு கோவில்களின் தரிசனத்துடன் நடைபயணத்தை மீண்டும் திருக்காமீஸ்வரர் கோவிலில் நிறைவு செய்தனர்.
சித்ரா பவுர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலத்திற்கு செல்ல முடியாத புதுவை, தமிழக பகுதியை சேர்ந்த பக்தர்களும், வில்லியனூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த சிவனடியார்கள், சிவ பக்தர்கள் அதிக அளவில் இந்த நடைபயணத்தில் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X