search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடக்கு போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணிக்கு தயாராகும் போலீசார்.
    X
    வடக்கு போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணிக்கு தயாராகும் போலீசார்.

    சித்ரா பவுர்ணமியையொட்டி வேலூரில் இன்று நள்ளிரவில் 7 புஷ்ப பல்லக்குகள் பவனி

    சித்ரா பவுர்ணமியையொட்டி வேலூரில் இன்று நள்ளிரவில் 7 புஷ்ப பல்லக்குகள் பவனி நடைபெறுகிறது.
    வேலூர்:

    வேலூர் மாநகர பகுதியில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தன்று புஷ்ப பல்லக்குகள் பவனி வரும் விழா கண் கொள்ளா காட்சியாக இருக்கும். 

    கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விழா நடக்கவில்லை. கொரோனா பாதிப்பு தொற்று முற்றிலும் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

    விழாக்கள் நடத்தவும் அரசு அனுமதி வழங்கி உள்ளது. இன்று சித்ரா பவுர்ணமியையொட்டி கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் சார்பில் அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர், அரிசி மண்டி உரிமையாளர்கள் சார்பில் சேண்பாக்கம் செல்வ விநாயகர், வெல்ல மண்டி உரிமையாளர்கள் சார்பில் தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர், பூ மார்க்கெட் தொழிலாளர்கள் சார்பில் லாங்கு பஜார் வேம்புலி அம்மன், மோட்டார் வாகன பணியாளர்கள் சங்கம் சார்பில் விஷ்ணு துர்கை அம்மன் உட்பட 7 புஷ்ப பல்லக்குகள் ஊர்வலத்தில் பங்கேற்க உள்ளது.

    அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் உற்சவ மூர்த்திகள் புறப்பட்டு மண்டி வீதி  வழியாக இரவில் வருகிறது.  மண்டி வீதி வந்தடையும் பூப்பல்லக்குகளில் வீற்றிருக்கும் உற்சவ மூர்த்திகளுக்கு அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டு வானவேடிக்கைகள் நடக்கிறது. 

    பின்னர் மேளதாளங்களுடன் 7 பூப் பல்லக்குகள் புறப்பட்டு  லாங்கு பஜார், கமிசரி பஜார், பில்டர் பெட்ரோடு திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் அண்ணாசாலை வழியாக கோட்டைக்கு வருகிறது. அங்கு வானவேடிக்கைகள் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

    அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுகின்றனர்.
    Next Story
    ×