என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    அரியலூர் மாவட்டத்தில் 550 மெ.டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலமாக 550 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
    அரியலூர்:

    வேளாண் உற்பத்தியை பெருக்கி விவசாய பெருமக்களின் வருமானத்தினை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக நடப்பு 2021-22ம் ஆண்டு ராபி பருவத்தில் மீண்டும் பயறு வகைகள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கத்தில் மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் உளுந்து கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் பெரம்பலூர் விற்பனை குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஜயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலமாக உளுந்து 550 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    உளுந்து விளைப்பொருள்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சராசரி தரத்தில் இருக்கும் வண்ணம் நன்கு சுத்தம் செய்து நன்கு உலர வைத்து அயல் பொருள்கள் கலப்பின்றி விவசாயிகள் கொண்டு வரவேண்டும்.

    இவ்வாறு நன்கு உலர வைக்கப்பட்ட தரமான உளுந்து கிலோவுக்கு ரூ.63 வீதம் கொள்முதல் செய்யப்படும் உளுந்துக்கான கிரயம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மாவட்டத்தில் உளுந்து விளை பொருள் மே 15ந் தேதி வரை கொள்முதல் செய்யப்படும்.

    இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நில சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகங்கள் ஆகிய ஆவணங்களுடன் ஜயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினை அணுகி பதிவு செய்து தங்களது உளுந்து விளைப்பொருளை விற்பனை செய்து பயனடையலாம்.

    இத்தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×