என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவையில் பக்கத்து வீட்டில் 6 பவுன் நகைகளை திருடிய இளம்பெண் கைது
Byமாலை மலர்16 April 2022 9:30 AM GMT (Updated: 16 April 2022 9:30 AM GMT)
போலீசார் ரோகினியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை:
கோவை இடையர்பாளையம் அருகே உள்ள மகா கணபதி நகரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 52). இவரது மனைவி தனது தங்க நகைகளான 2 பவுன் நெக்லஸ், 3 பவுன் ஆரம் ஆகியவற்றை கழற்றி பீரோவில் வைத்து இருந்தார்.
சம்பவத்தன்று அவர் பீரோவை சுத்தம் செய்வதற்காக சென்றார். அப்போது பீரோவில் இருந்த நகைகள் மாயமாகி இருந்தது. இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் காளிதாஸ் என்பவரது மனைவி ரோகினி (28) என்பவர் அடிக்கடி வந்து சென்றார். கடந்த சில நாட்களாக அவர் வரவில்லை. இதனால் சவுந்தர்ராஜனுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இது குறித்து அவர் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ரோகினியை பிடித்து விசாரணை நடத்தி-னர். அப்போது அவர் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் ரோகினியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X