search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கூடலூர் அருகே மோட்டார் சைக்கிள்-ஜீப் நேருக்குநேர் மோதல், வாலிபர் பலி

    தேவலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊட்டி: 

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா நாடுகாணியை சேர்ந்தவர் விக்னேஷ்வரன்(வயது45). 

    இவரது நண்பர் நாகராஜ்(44). இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் பொன்னூர் பகுதியில் உள்ள நண்பர் ஒருவரை பார்க்க சென்றனர்.

    இவர்களது மோட்டார் சைக்கிள் சிறிது தூரம் சென்ற நிலையில் எதிரே ஒரு ஜீப் வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஜீப்பும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து விக்னேஷ்வரன், நாகராஜ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். 

    பலத்த காயம் அடைந்த நாகராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விக்னேஷ்வரன் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தேவாலா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் காயங்களுடன் உயிருக்கு போராடிய விக்னேஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தேவலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×