என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கூடலூர் அருகே மோட்டார் சைக்கிள்-ஜீப் நேருக்குநேர் மோதல், வாலிபர் பலி
Byமாலை மலர்16 April 2022 9:10 AM GMT
தேவலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா நாடுகாணியை சேர்ந்தவர் விக்னேஷ்வரன்(வயது45).
இவரது நண்பர் நாகராஜ்(44). இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் பொன்னூர் பகுதியில் உள்ள நண்பர் ஒருவரை பார்க்க சென்றனர்.
இவர்களது மோட்டார் சைக்கிள் சிறிது தூரம் சென்ற நிலையில் எதிரே ஒரு ஜீப் வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஜீப்பும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து விக்னேஷ்வரன், நாகராஜ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.
பலத்த காயம் அடைந்த நாகராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விக்னேஷ்வரன் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தேவாலா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் காயங்களுடன் உயிருக்கு போராடிய விக்னேஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தேவலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X