என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரெயில் நிலையத்தில் வடமாநில குழந்தை தொழிலாளர்கள் 4 பேர் மீட்பு
Byமாலை மலர்16 April 2022 8:52 AM GMT (Updated: 16 April 2022 8:52 AM GMT)
ரெயில் நிலையத்தில் வடமாநில குழந்தை தொழிலாளர்கள் 4 பேர் மீட்கப்பட்டனர்.
திருச்சி:
வட மாநிலங்களான ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திருச்சி ஈரோடு சேலம் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டத்திற்கு குழந்தை தொழிலாளர்களை அழைத்து வருவதாக திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல்கள் வந்து கொண்டே இருந்தது.
அந்த அடிப்படையில் திருச்சி ரெயில் நிலையத்திற்கு வடமாநிலத்தில் இருந்து வருகை புரியும் அனைத்து ரெயில்களையும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று அதிகாலை கொல்கத்தா ஹவுரா பகுதியிலிருந்து ஹவரா எக்ஸ்பிரஸ் திருச்சி ரெயில் நிலையத்திற்கு 3 மணி அளவில் வந்தது.
அப்போது திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் ஹவுரா விரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீவிரமாக சோதனை செய்து வந்தனர்.
அப்போது 4 சிறுவர்கள்சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் ஜார்கண்ட் பகுதியைச் சேர்ந்த மத்தியூஸ் முர்மோ (வயது13), சிம்லா மராண்டி (13), மேற்கு வங்காளம் பகுதியைச் சேர்ந்த சோமநாத் டோமோ (15), பந்தன் தந்தார் (16) ஆகிய 4 பேரும் ஏஜெண்டுகள் மூலமாக திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு செல்வதற்காக வந்துள்ளனர். என்பது தெரியவந்தது.
பின்னர் அந்த சிறுவர்களை மீட்டு திருச்சி சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து குழந்தை தொழிலாளர்கள் திருச்சி ரெயில் நிலையத்திற்கு வருகை புரிவது அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதனால் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் இவ்வாறு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X