search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    லாட்ஜ் உரிமையாளர் தூக்குபோட்டு தற்கொலை

    ஈரோட்டில் மகன், தம்பி இறந்த துக்கம் தாங்காமல் லாட்ஜ் உதிமையாளர் தூக்கிட்டு தற்கொலை கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் மகன், தம்பி இறந்த  துக்கம் தாங்காமல் லாட்ஜ் உதிமையாளர் தூக்கிட்டு தற்கொலை கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு இடையன் காட்டுவலசு செங்குட்டுவன் வீதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது71). லாட்ஜ் உரிமையாளர்.

    இவரது லாட்ஜ் ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ளது. தினமும் லாட்ஜிக்கு ஈஸ்வரன் வந்து செல்வது வழக்கம்.

    இதேபோல் நேற்று வழக்கம்போல் ஈஸ்வரன் தனது லாட்ஜிக்கு வந்தார்.

    பின்னர் லாட்ஜில் ஒரு அறைக்குள் சென்ற ஈஸ்வரன் உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் ஈஸ்வரன் கதவை திறக்க-வில்லை.

    இதனால் ஊழியர்-கள் மாற்று சாவியை கொண்டு வந்து கதவை திறந்து பார்த்தனர்.

    அப்போது அறைக்குள் ஈஸ்வரன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரி-விக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ஈஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசார ணையில் ஈஸ்வரனின் மகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

    இதேபோல் ஈஸ்வரனின் தம்பி குணசேகரன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு லாட்ஜில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த ஈஸ்வரன் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×