search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
    X
    நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

    தி.மு.க. சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

    தரங்கம்பாடி அருகே தி.மு.க. சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாலுக்கா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள அம்பேத்-கர் சிலைக்கு நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ.வுமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு 

    மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

    அப்போது அவர் கூறும்-போது, அம்பேத்கரின் பிறந்த தினத்தை சமத்துவ தினமாகக் கொண்டாட வேண்டும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உலகம் போற்றப்படும் தலைவராக 

    விளங்கி வரும் அம்பேத்காரின் பிறந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். இந்த தருணத்தில் தமிழக முதல்வருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, துணைச் செயலாளர் ஞான-வேலன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப நுட்ப அணி அமைப்பாளர் ஸ்ரீதர், கீழப்பெரும்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் தேவி 

    சுரேஷ்குமார், விடுதலை சிறுத்தை கட்சியின் கலியமூர்த்தி, ராமலிங்கம், சி.பி.ஐ. கட்சி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கிராம தலைவர் குமார், சுந்தர், நாம் தமிழர் கட்சியினர் செல்வம், மற்றும் 

    ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு கவுன்சிலர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×