search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட போது எடுத்த படம்
    X
    கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட போது எடுத்த படம்

    அரியலூரில் சமத்துவ உறுதி மொழி ஏற்பு

    அரியலூரில் கலெக்டர் அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ உறுதிமொழி ஏற்கப்பட்டது.
    அரியலூர்:

    அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாளாக கொண்டாடிட முதலமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாவட்ட கலெக்டர்  ரமண சரஸ்வதி மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.பின்னர் சமத்துவ உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    சமத்துவ நாள் உறுதிமொழியான சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும்,  

    ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில் சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும்,  

    சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என மாவட்ட  கலெக்டர் ரமண சரஸ்வதி உறுதிமொழியினை வாசிக்க, அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அன்பரசி, வட்டாட்சியர்கள் அமுதா, முத்துலெட்சுமி, சந்திரசேகர், குமரையா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×