search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது

    ஜெயங்கொண்டத்தில் அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீசார் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள ராஜாக்கொல்லை தெரு, சின்னவளையம், பெரியவளையம் பகுதிகளிலும் திடீர் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். 

    அப்போது அந்தந்த பகுதியில் சந்தேகத்தின் பேரில் 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் பெரியவளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 45), ஜெயங்கொண்டம் ராஜாக்கொலைத் தெருவைச் சேர்ந்த கலிராஜ் (64) என்பதும், மேலும் அவர்கள் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பதும் தெரிய வந்தது.  

    இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 26 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×