என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அம்பேத்கருக்கு முழு உருவ வெண்கல சிலை ரங்கசாமி அடிக்கல் நாட்டினார்
Byமாலை மலர்15 April 2022 4:00 AM GMT (Updated: 15 April 2022 4:00 AM GMT)
அபிஷேகபாக்கத்தில் ரூ.39 லட்சம் செலவில் அம்பேத்கருக்கு முழு உருவ வெண்கல சிலையை ரங்கசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
மணவெளி தொகுதி அபிஷேகபாக்கத்தில் அம்பேத்கரின் 131வது பிறந்த நாளை முன்னிட்டு அங்குள்ள பழமையான அம்பேத்கர் சிலைக்கு முதல்அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து புதுவை அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும். பாட்கோ சார்பில் ரூ.39 லட்சம் மதிப்பில் அம்பேத்கர் முழு உருவ வெண்கல சிலை மற்றும் மண்டபம் அமைப்பதற்கு முதல்அமைச்சர் ரங்கசாமி மற்றும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அரசு துறை செயலர் உதயகுமார், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் யஷ்வந்தையா, ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் தயாளன், செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், பொது மேலாளர் ஆறுமுகம், இளநிலை பொறியாளர் ஜெயமுகுந்தன், முன்னாள் மகளிர் ஆணைய தலைவி வைஜெயந்தி மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் ராமு, கிருஷ்ணமூர்த்தி, மனோகர், மாயகிருஷ்ணன், வீரப்பன், ஜானகிராமன், கதிரேசன், சக்திவேல், ஹேமாமாலினி, ரமேஷ், உமாகாந்தாரி மற்றும் ன பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X