என் மலர்
உள்ளூர் செய்திகள்

குண்டு மல்லி பூ சப்பரத்தில் அம்மன் உலா வந்த காட்சி.
மதுரை குண்டுமல்லி பூ சப்பரத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்த அம்மன்
ராஜபாளையம் கோவில் திருவிழாவில் மதுரை குண்டுமல்லி பூ சப்பரத்தில் வீதி உலா வந்து அம்மன் அருள்பாலித்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா வில் தேவர் சமூகத்தாரின் 7ம்நாள் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
ஆண்டத்தம்மன் கோவில் தெரு இந்து மறவர் மகாசபை தலைவரும், நாட்டாண்மையு மான கதிர்வேல்தேவர் தலைமையில் செயலாளர் குருநாதன், பொருளாளர் வி.எஸ்.ராசா, துணை செயலாளர் செந்தில்வேல், துணை தலைவர் மாரியப்பன், இணை தலைவர்கள் சுப்பிரமணியம், கணேசன், முன்னிலையில் நடைபெற்ற விழாவில் பாரம்பரிய முறைப்படி தனித்துவத்துடன் பல்லாயிரம் கிலோ எடை கொண்ட மணக்கும் குண்டு மல்லி கொண்டு அலங்கரிக்கப்பட்ட பூ சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
12-க்கும் மேற்பட்ட வாடிப்பட்டி மேளம், மேளதாளம், நாதஸ்வரம் முழங்க வீதி உலா வந்த அம்மனுக்கு தெருக்களில் கூடி நகன்ற பக்தர்கள் கொழுக்கட்டை படையலிட்டு, மாவிளக்கு ஏற்றி வைத்து தேங்காய் உடைத்து அம்மனுக்கு பூ மாலை அணிவித்து வழிபட்டனர். பூ பல்லக்கில் அசைந்து, அசைந்து அம்மன் பவனி வந்தது கண்கொள்ளா காட்சியாக அமைந்திருந்தது.
விழாவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் சின்னமாரிமுத்து, கணேசன், குழந்தைவேல், நாராயணன், பாலசுப்பிரமணியன், கோபால், சிவபிரகாசம், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
விழா ஏற்பாடுகளை புதுப்பாளையம் தேவர் சமூகத்தார் ஆண்டத்தம்மன் கோவில் தெரு நாட்டாண்மை கதிர்வேல்தேவர் மேனேஜ்மெண்டில் சிறப்பாக செய்திருந்தனர்.
Next Story






