search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    உள்துறை மந்திரி வருகை பயனுள்ளதாக இருக்கும்- கவர்னர் தமிழிசை தகவல்

    உள்துறை மந்திரி வருகை பயனுள்ளதாக இருக்கும் என்று கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரவிந்தரின் 150-வது ஆண்டு விழா கொண்டாடி வருகிறோம். வருகிற 24-ந் தேதி நடைபெறும் விழாவில் பங்கேற்க மத்திய உள்துறை  மந்திரி அமித்ஷா வர உள்ளார். 

    அவரது வருகை புதுவைக்கு ஆக்கப்பூர்வ மானதாக இருக்கும். இந்தி மொழி குறித்த உள்துறை மந்திரியின் கருத்து  தவறாக முன்னெடுத்து செல்லப்படுகிறது. 

    எல்லோரும் தாய்மொழி பற்றோடு இருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. தமிழ்மொழி போன்ற அனைத்து தாய்மொழிகளுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் கூறியிருப்பதாகத்தான் நான்  நினைக்கிறேன். 

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×