என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.
    X
    முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.

    ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பா.ம.க. முற்றுகை

    திருக்கனூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பா.ம.க.வினர் முற்றுகையிட்டனர்.
    புதுச்சேரி:

    மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட திருக்கனூரில் உள்ள விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொண்டு வரும் வேளாண் பொருட்களுக்கு 10, 15 நாட்கள் கழித்து பணம் பட்டுவாடா செய்வதாகவும், இதனால் விவசாயிகள் அலைகழிக்கப்படுவதாக புகார் இருந்து வந்தது.

    மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்களை பாதுகாப்பாக வைக்க போதிய இடம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறப்படுகிறது. இதனை கண்டித்து பா.ம.க.வினர் மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்தில் மாநில துணை அமைப்பாளர் வடிவேல், மதியழகன், சீதாராமன், மணிபால், ஊசுடு முருகன், தொழிற்சங்க தலைவர் சிவா, செயலாளர்கள் வேல்முருகன், பாண்டித்துரை, கிருஷ்ணதேவன், தொழிற்சங்க துணை செயலாளர்கள் அச்சுதன், மாநில வன்னியர் சங்க செயலாளர் நாகப்பன், தலைமை நிலைய செயலாளர் சுப்பிரமணி, மண்ணாடிப்பட்டு தொகுதி தலைவர் ஏழுமலை, செயலாளர் தேவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×