search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கூலி தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

    புதுவைக்கு வேலைக்கு வந்த கூலி தொழிலாளி மயங்கி விழுந்து இறந்து போனார்.
    புதுச்சேரி:

    விருத்தாசலம் கோ.ஆதனூர் காலனியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது60. கூலி தொழிலாளி. இவரது மகன் பாலமுருகன்(23). கூலி தொழிலாளி.

    இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த பாலமுருகனிக் நண்பரான பூபாலனுடன் புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வேலைக்காக சென்றார். அங்கிருந்த ஒரு டீக்கடையில் டீ குடிப்பதற்காக சென்று-கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென பாலமுருகன் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் உதவியுடன் பாலமுருகனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்-திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனையறிந்த ராமலிங்கம் லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லாஸ்பேட்டை வள்ளலார்நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவரது மனைவி எழிலரசி. இவர்களுடன் எழிலரசியின் தாய் தேவகி(67) வசித்து வந்தார்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக தேவகி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். 

    இந்த நிலையில்  மறைமலை அடிகள் சாலையில் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைத்துறை அலுவலகம் முன்பு தேவகி திடீரென மயங்கி விழுந்தார்.

    இதனையறிந்த எழிலரசி தனது கணவருடன் அங்கு சென்று தாய் தேவகியை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து எழிலரசி உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×