search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயனாளிகளுக்கு எல்.இ.டி. பல்புகளை வி.பி.ராமலிங்கம் வழங்கிய காட்சி.
    X
    பயனாளிகளுக்கு எல்.இ.டி. பல்புகளை வி.பி.ராமலிங்கம் வழங்கிய காட்சி.

    பயனாளிகளுக்கு எல்.இ.டி. பல்புகள்

    பிரதமரின் வீடுகட்டும் திட்ட பயனாளிகளுக்கு எல்.இ.டி. பல்புகள் வி.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    புதுச்சேரி:

    ராஜ்பவன் தொகுதிக்-குட்பட்ட பகுதிகளில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனடைந்த பயனாளி-களுக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. வி.பி. ராமலிங்கம் எல்.இ.டி. பல்பு, இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதுவை ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட வைத்திக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் கட்டப்-பட்டுள்ளன. இந்த வீடுகளின் பயனாளிகளை பா.ஜனதா எம்.எல்.ஏ  வி.பி.ராமலிங்கம் நேரில் சென்று பார்வையிட்டார்.

     அப்போது அவர்களுக்கு எல்.இ.டி. பல்பு, மற்றும் இனிப்பு வழங்கியும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தார். பிரதமரின் இந்த பயனுள்ள திட்டத்தை மக்களிடம் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என பயனாளிகளிடம் வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தெரிவித்தார். ராஜ்பவன் தொகுதி பா.ஜனதா தலைவர்  நாகராஜன் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் ஓ.பி.சி. மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியன், தொகுதி பொது செயலாளர் கதிரவன், மாநில செயலாளரும், திட்டத்தின் பொறுப்பாளருமான லதா, நகர மாவட்ட பொது செயலாளர் விமலா, ஓ.பி.சி. பிரிவு தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ரஞ்சித், தொகுதி துணை தலைவர் அமுதா, செயலாளர்கள் ராம்குமார், ரகுகுமார், கீதா, பட்டாபி, கபிலன் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள்  கலந்து கொண்டனர்.
    Next Story
    ×