என் மலர்
உள்ளூர் செய்திகள்

அப்பு அரவிந்த்
ரவுடி கொலையில் மேலும் 2 பேர் கைது
கோட்டக்குப்பம் அபினேஷ் கொலையில் பிரபல ரவுடி-கூட்டாளி கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:
கோட்டக்குப்பம் அபினேஷ் கொலையில் பிரபல ரவுடி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கோட்டக்குப்பம் மரக்காயர் வீதியில் கடந்த 8-ந்தேதி இரவு மரக்காணம் அடுத்த நொச்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ரவுடி அபினேஷ் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சோலை நகரை சேர்ந்த கலையரசன் மர்ம சாவுக்கு பழிக்குப்பழியாக நடந்தது விசா-ரணையில் தெரியவந்தது. அபினேஷ் கொலை சம்பவத்தில் சோலை நகரை சேர்ந்த சதீஷ் என்கற ஆமைவாயன், அஜித்ராஜ் மற்றும் முகம்மது அசேன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து கொலைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர்.
சதீஷ் கொடுத்த வாக்குமூலத்தின்படி இந்த கொலையில் தொடர்புடைய சின்னகோட்டக்குப்பம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ராயர் மகன் அப்பு என்கிற ஜவகர் வயது (21) மற்றும் கோட்டகுப்பம் சோதனைகுப்பம் அய்யனார் கோவில் வீதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அரவிந்த் (வயது 22) ஆகிய 2 பேரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்ஸ்-பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் அப்பு என்ற ஜவகர் மற்றும் அவரது கூட்டாளி அரவிந்தை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான அப்பு என்ற ஜவகர் பிரபல ரவுடி ஆவார். அவர் மீது ஏற்கனவே 2 கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story






