என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா
கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அரியலூர்:
அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சியில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீராம நவமியன்று 10 நாள் பெருந்திருவிழா தொடங்கும்.
அதன்படி முதல் நாள் கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது. பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அருகில் கொடிமரத்தில் ஏறறுவதற்கான ஆஞ்சநேயர் கொடி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னர் கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது. இதில் ஆதீன பரம்பரை தர்மகர்த்தாக்கள் ராமதாஸ் படையாட்சி, வெங்கடாஜலபதி படையாட்சி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 2 வருடமாக கொரோனா நோய் தொற்று காரணமாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு திருவிழா சிறப்பாக நடப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு முதல் நாள் திருவிழாவானது நேற்று சூரிய வாகனத்தில் பெருமாள் இரவு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சாமி திருவீதி உலா நான்கு வீதிகள் வழியாக நடந்தது.
திருத்தேரோட்டம் 18 -ந் தேதி காலை 5 மணிக்கு நடைபெறுகிறது. 19-ந் தேதி இரவு ஏகாந்த சேவையும், 20-ந் தேதி காலை வெள்ளிப் படிச்சட்டம் மஞ்சள் நீர், பாலிகை நீர்த்துறை சேர்த்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.
அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சியில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீராம நவமியன்று 10 நாள் பெருந்திருவிழா தொடங்கும்.
அதன்படி முதல் நாள் கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது. பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அருகில் கொடிமரத்தில் ஏறறுவதற்கான ஆஞ்சநேயர் கொடி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னர் கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது. இதில் ஆதீன பரம்பரை தர்மகர்த்தாக்கள் ராமதாஸ் படையாட்சி, வெங்கடாஜலபதி படையாட்சி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 2 வருடமாக கொரோனா நோய் தொற்று காரணமாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு திருவிழா சிறப்பாக நடப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு முதல் நாள் திருவிழாவானது நேற்று சூரிய வாகனத்தில் பெருமாள் இரவு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சாமி திருவீதி உலா நான்கு வீதிகள் வழியாக நடந்தது.
திருத்தேரோட்டம் 18 -ந் தேதி காலை 5 மணிக்கு நடைபெறுகிறது. 19-ந் தேதி இரவு ஏகாந்த சேவையும், 20-ந் தேதி காலை வெள்ளிப் படிச்சட்டம் மஞ்சள் நீர், பாலிகை நீர்த்துறை சேர்த்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.
Next Story






