என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாரியம்மன்கோவில் பால்குட விழா
Byமாலை மலர்11 April 2022 6:27 AM GMT (Updated: 11 April 2022 6:27 AM GMT)
மாரியம்மன்கோவில் பால்குட விழா நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் மாரியம்மன் கோயிலில் 55-வது ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது. திருமானூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு அன்று பால்குடத்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நிகழாண்டு பால்குடத்திருவிழா நேற்று நடைபெற்றது. 55-வது ஆண்டாக நடைபெற்ற பால்குடத்திருவிழாவில், பக்தர்கள் கொள்ளிட ஆற்றிலிருந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் பால்குடம், பால்காவடி, அலகுகாவடி, கரும்புத்தொட்டில் உள்ளிட்டவற்றை சுமந்தும், அலகுகுத்தியும் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக கோயிலுக்கு சென்றனர்
.
அங்கு, பக்தர்கள் கொண்டு வந்த பால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. தொடர்ந்து, இரவு நாதஸ்வர இன்னிசை கச்சேரியும், வானவேடிக்கையும் நடைபெற்றது.
பின்னர், மலர் மற்றும் மின்னொளி அலங்காரத்துடன் அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் மாரியம்மன் கோயிலில் 55-வது ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது. திருமானூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு அன்று பால்குடத்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நிகழாண்டு பால்குடத்திருவிழா நேற்று நடைபெற்றது. 55-வது ஆண்டாக நடைபெற்ற பால்குடத்திருவிழாவில், பக்தர்கள் கொள்ளிட ஆற்றிலிருந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் பால்குடம், பால்காவடி, அலகுகாவடி, கரும்புத்தொட்டில் உள்ளிட்டவற்றை சுமந்தும், அலகுகுத்தியும் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக கோயிலுக்கு சென்றனர்
.
அங்கு, பக்தர்கள் கொண்டு வந்த பால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. தொடர்ந்து, இரவு நாதஸ்வர இன்னிசை கச்சேரியும், வானவேடிக்கையும் நடைபெற்றது.
பின்னர், மலர் மற்றும் மின்னொளி அலங்காரத்துடன் அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X