என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
முதியவர் மயங்கி விழுந்து சாவு
லாஸ்பேட்டையில் முதியவர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டையை அடுத்த புதுபேட்டை கனகன் தோட்டம் வீதியை சேர்ந்தவர் அருட்பெருஞ்ஜோதி (வயது80) இவரது மனைவி சரோஜாதேவி. இவர்களுக்கு 2 மகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித் தனியாக வசித்து வருகிறார்கள்.
வயது முதிர்ச்சி காரணமாக அருட்பெருஞ்ஜோதிக்கு உடல்வலி போன்ற சிறுசிறு பிரச்சினைகள் இருந்து வந்தது.
இந்தநிலையில் அருட்பெருஞ்ஜோதி உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி சரிந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி சரோஜாதேவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு சிகிச்சைக்காக ஆட்டோவில் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அருட் பெருஞ்ஜோதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். திடீர் நெஞ்சுவலியால் அருட்பெருஞ்ஜோதி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது மனைவி சரோஜாதேவி கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






