என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வாலாஜாவில் குட்கா பதுக்கி வைத்திருந்த வியாபாரிகள் 2 பேர் கைது
வாலாஜாவில் குட்கா பதுக்கி வைத்திருந்த வியாபாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் போன்ற பொருட்கள் தாராளமாக புழக்கத்தில் இருப்பதாகவும் பல்வேறு மாநிலங் களிலிருந்து கடத்தப் படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது.
இதை யடுத்து ராணிப் பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவின் பேரில் ராணிப் பேட்டை டிஎஸ்பி பிரபு அறிவுரையின் பேரில் வாலாஜாபேட்டை இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீசார் தொடர்ந்து பல்வேறு கடைகளில் சோதனை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் காண்டீபன் தலைமையில் சப்&இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் நர்சோஜிராவ் தெருவில் சாக்லேட் மொத்த வியாபாரம் செய்யும் வடநாடு வியாபாரி கடையில் திடீர் சோதனை செய்தனர்.
போலீசார் சோதனையில் தடைசெய்யப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பான்மசாலா ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் சுமார் 210 பாக்கெட்களை மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை பறிமுதல் செய்த வாலாஜா போலீசார் கடை உரிமையாளர் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
Next Story






