என் மலர்
உள்ளூர் செய்திகள்

சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டிகள்.
சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டிகள்
சிவகாசியில் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நாளை தொடங்குகிறது.
ராஜபாளையம்
தமிழ்நாடு 65வது சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் (ரோடு ரேஸ்) சிவகாசி அரசன் கணேசன் தொழில்நுட்பக் கல்லூரியில் இருந்து நாளை (10ந்தேதி) காலை 7மணிக்கு தொடங்குகிறது.
விருதுநகர் சாலையில் நடைபெறும் இந்த போட்டியில் தமிழகத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட சைக்கிளிங் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
போட்டிகளை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரன் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன்அசோகன், மாநில சைக்கிளின் கழகத் தலைவர் முருகானந்தம், சைக்கிளிங்கழக சேர்மன் திருப்பூர் ஜெயசித்ரா சண்முகம் மாநிலச் செயலாளர் கபடி ராஜா மற்றும் அரசன் பாலிடெக்னிக் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் உள்பட விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்
Next Story






